கரூரில் பரத முனிவருக்கு அஞ்சலி.. கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி.. 2000 கலைஞர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

கரூர் கூத்தம்பலம் நுண்கலை அகாடமி சார்பில் கின்னஸ் சாதனைக்காக பரத முனிவர் அஞ்சலி என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவிலுள்ள முன்னிலை பரதநாட்டியக் கலைஞர்கள் 2,180 பேர் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்ற விருத்தாசலம் மாஸ்டர் அகாடமி பரதநாட்டியப் பள்ளி குரு வகிதாபானு, குரு பாபு தீன்முகமது தலைமையில், சவிதா, ரம்யா, சுவேதா, பவித்ரா, ஷிபா, உதயா, நவியா, பிரதிக்ஷா ஆகியோர் பங்கேற்று, நடனமாடி பரிசு பெற்றனர். இந்த நடனகுழுவுக்கு டிவி நடிகை ஆர்த்தி தலைவியாக இருந்து ஆடி வழிநடத்தினார்
பரதமுனிவர் விருது
இந்த விழாவில் விருத்தாசலம் மாஸ்டர் அகாடமி பரதநாட்டிய ஆசிரியைக்கு "பரத முனிவர்' விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாட்டிய மேதைகள் தனஞ்செயன், சாந்த தனஞ்செயன் ஆகியோர், குரு வகிதாபானுவுக்கு "பரத முனிவர்' விருது வழங்கி, கவுரவித்தனர்.












Click it and Unblock the Notifications