இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலை எங்கே?
ரஜோரி/டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலையைத் திருப்பித் தருமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 2 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பின்னர் ஒரு வீரரின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த வீரரின் தலை தற்போது எங்கே என்று தெரியவில்லை. இதுகுறித்து ரஜோரி பகுதி ராணுவ அதிகாரி ஜே.கே.திவாரி கூறுகையில், இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களையும் கொடூரமாக சிதைத்துள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள். அதில் ஒருவருடையை தலையை துண்டித்து விட்டனர். துண்டிக்கப்பட்ட தலை எங்கே என்று தெரியவில்லை. இதுகுறித்து தேடி வருகிறோம். பாகிஸ்தான் வீரர்கள் தலையை எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது என்றார்.
தலை துண்டிக்கப்பட்ட வீரரின் பெயர் சுதாகர் சிங் ஆகும். இவரும் லேன்ஸ் நாயக் ஹேம்ராஜ் என்பவரும்தான் கொல்லப்பட்டவர்கள். துண்டிக்கப்பட்ட தலையை ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் தரப்புக்கு இந்திய ராணுவத்திடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications