சென்னையில் கடனை திருப்பி கேட்டதால் பெண் கொலை: தம்பதி கைது
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பெண் கொலை, தொடர்பாக கட்டிடத்தொழில் செய்யும் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி தெருவை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி விஜயா (50). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை விஜயா சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகம் அருகே சாலை ஓர புதர் பகுதியில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சென்று பிணத்தை மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பேசப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பிலிருந்து அந்த பெண்ணைக் கொலை செய்த கட்டுமானத் தொழிலாளர்களான ரவி, புஷ்பா தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விஜயாவிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த அவர்களால் நீண்ட காலமாக கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பணத்தை திரும்ப கேட்ட, விஜயாவைக் தனியிடத்திற்கு வரவழைத்து, இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தனர். மேலும் கொலை செய்த போது விஜயாவின் உடலில் இருந்து அவர்கள் கொள்ளையடித்த தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications