ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் விடிய விடிய துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் விடிய விடிய தொடர்ந்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை மீண்டும் 5 நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கிருஷ்ணா கடி, சோனா கலி உள்ளிட்ட 5 ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியத் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் சண்டையில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகுவிப்பை அதிகப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications