டெல்லி பாலியல் பலாத்கார குற்றவாளியான மகனை தண்டியுங்கள்: மைனரின் தாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான '18 வயதை அடையாத மைனரான தமது மகனைத் தண்டிக்க வேண்டும் என்று அவனது தாயார் கூறியுள்ளார்.

பாலியல் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6-வது குற்றவாளி சிறுவன். 18 வயதை அடையாத அவன் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான். சிறுவன்தான் என்பதை அவன் படித்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.

இதனிடையே அவனது தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 6 குழந்தைகள். மூத்த மகன் 11 வயதில் வேலை தேடி டெல்லிக்கு போனான். கடந்த 3 ஆண்டுகளாக அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதுதான் திடீரென போலீசார் விசாரித்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதுடன் அவனது செயலால் அவமானத்தில் தலைகுனிந்து வாழ்கிறோம். அவன் செய்த தவறுக்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்றார் அவர்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் குடும்பத்தினரை பாதுகாப்பு இணை மந்திரி ஜிதேந்திரா சிங் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, 'இந்திய அரசு சார்பில் ஹேம்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ. 46 லட்சம் வழங்கப்படும்' என்றார். பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் ஆலோசித்து அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் ஜிதேந்திரா சிங் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+