12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வளர்ப்புத் தந்தை கைது
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 12 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்திய வளர்ப்புத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திலீப் படேல் என்ற 35 வயதான குற்றவாளி சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியே உறவில் ஈடுபட்டு கொடுமை செய்துள்ளான். இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். வளர்ப்புத் தந்தையின் மீதுள்ள பயத்தினால் அவன் செய்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்த அந்த சிறுமி ஒருநாள் அவன் வெளியே போயிருந்த போது தனது தாயிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறாள்.
இதனைத் தொடர்ந்து தனது கணவனை கைது செய்யக் கோரி மகளுடன் அம்பாசாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து கலம்னா பகுதியில் இரண்டாவது மனைவியிடன் வசித்து வந்த படேலை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
படேல் மீது புகார் கொடுத்துள்ள மைனர் பெண்ணின் தாயார் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவனை விட்டுவிட்டு படேலை இரண்டாதாக திருமணம் செய்து கொண்டார். மகள் முறை என்றும் பாராமல் தனது குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது கண்டு பொறுக்காமல் தற்போது கணவனுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். தற்போது படேல் மீது சிறுவர்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications