Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தியாகிகளா? பலிகடாக்களா?: ராஜ்தாக்கரே உளறல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகிஸ்தானால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்டிருக்கும் கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் இருவரை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் நாட்டையே உறைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் ராஜ்தாக்கரே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையானது, நாட்டு மக்கள் சந்தித்து வரும் பல்வேறு கொந்தளிப்பான மனநிலையில் இருந்து திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்டுள்ள நாடகமாக இருக்கலாம்.

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உண்மையில் தியாகிகளா? அல்லது இந்தியா- பாகிஸ்தான் அரசியலுக்காக பலிகடா ஆக்கப்பட்டவர்களா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

ஹேம்ராஜ் குடும்பத்துக்கு ராணுவ தளபதி ஆறுதல்

இதனிடையே ராணுவ தளபதி பிக்ரம் சிங் தனது மனைவி சுர்ஜித் கவுருடன் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கெய்ரார் கிராமத்திற்கு கொல்லப்பட்ட வீரர்களின் ஒருவரான ஹேம்ராஜின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ராணுவ மரபுகளின்படி ஹேம்ராஜின் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் ராணுவம் செய்யும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+