பொங்கல்: நெல்லையில் இரண்டே நாளில் ரூ. 7.8 கோடிக்கு மது விற்பனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 7 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.
நெல்லை மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 48 கடைகளும், புறநகர் பகுதியில் 177 கடைகளும் உள்ளன. இங்கு 1,100 பேர் பணியாற்றுகின்றனர். இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை மதுபான விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாளான்று இரு மடங்கு முதல் மூன்று மடங்கு கூடுதலாக மதுபான விற்பனை நடைபெறும்.
நெல்லை மாவட்ட கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட பல்வேறு ரக மதுபான வகைகளின் விற்பனை கொடி கட்டிப் பறந்தது. காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாட்களாக மதுபான விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 14ம் தேதி 4 கோடியே 91 லட்சத்து 35
ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகின. 13, 14 ஆகிய இரு நாட்களும் சேர்ந்து ரூ.7 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்திற்கு மதுபானங்கள் விற்பனை ஆகின.












Click it and Unblock the Notifications