மோடியை பிரச்சாரக் குழு தலைவராக்கி லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக திட்டம்!

லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தலைமையிலான தேர்தல் குழுவை அமைத்து களமிறங்கிய காங்கிரஸ் நாளை ஜெய்ப்பூரில் கூடி அடுத்த கட்ட வியூகத்தை வகுக்க்கிறது. இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் தமது வியூகத்தை வகுத்து வருகிறது. பாஜக தலைவராக இருக்கும் நிதின் கத்காரியைவிட அக்கட்சியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். இவர் தலைமையில்தான் கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள தேர்தலை எதிர்கொண்டன. மோடியின் பொறுப்பில் இருந்த 3 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி அதிக இடன்களைப் பெற்றது. தற்போது குஜராத் மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் மோடிக்கு இமேஜ் அதிகரித்துள்ளது.
இதனால் மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருக்கிறது. மோடி தலைமையில் பிரச்சாரக் குழுவை களமிறக்கிவிடுவதுடன் அவரையே பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டால் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு பாஜகவினர் கணக்கு. இந்த வியூகத்துக்கு பாஜகவில் பலமான வரவேற்பு இருக்கிறது. இதேபோல் பாஜக நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications