மதுரை அருகே சுப்பிரணிய சாமி நடத்திய ரகசிய யாகம்: பரபரப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் என்ற ஊர் தான் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சொந்த ஊராகும். இந்த நிலையில் தனது ஊருக்கு எப்போது வந்தாலும் உடனே புறப்பட்டுவிடும் அவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை மூன்று நாட்கள் ஊரில் டேரா போட்டுள்ளார்.
இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, சுப்பிரமணிய சாமி தனது ஊருக்கு எப்போது வந்தாலும் சில மணி நேரம் இருந்து விட்டு புறப்பட்டு விடுவார். ஆனால் இந்த முறை அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.
அப்போது அவரது வீட்டிலும், அவரது ஊரில் உள்ள இளங்காளியம்மன் கோவிலிலும் கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி குபேர சுதர்சன யோகம் என்ற சிறப்பு யாகம் நடத்தினார். இந்த யாக்ததை நடத்தினால் எதிரிகளை சாந்தப்படுத்தி, அரசாட்சி யோகம் தருமாம். அவரது ஜாதகம் தற்போது மிகவும் சிறப்பாக உள்ளதாம். அதனால் அவருக்கு சிவப்பு லைட் வைத்த காரில் வலம் வரும் பதவி வருவது கட்டாயம் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறிவிட்டாராம். அவரது ஆலோனைப்படி தான் இந்த ரகசிய யாகம் என்று கண் சிமிட்டுகின்றார்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்பை கிளப்பி வரும் சாமி இந்த முறை யாகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications