இத்தாலிய படையினருக்கு எதிரான வழக்கை கேரள ஹைகோர்ட் விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: கொல்லம் கடற்பரப்பில் தமிழக மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் கடற்பரப்பில் கேரளாவில் வசித்து வந்த தமிழக மீனவர் இருவரை இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் இரு இத்தாலிய கடற்படையினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அவர்கள் இத்தாலி சென்றுவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இத்தாலிய கடற்படையினர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி சேதமேஸ்வர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, சம்பவம் நடைபெற்ற இடம் சர்வதேச கடல் எல்லை என கேரள போலீசார் கூறியுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது. அப்படி விசாரிக்க வேண்டுமானால் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று பிற்பகலில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications