மும்பை: 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஸ்கூல் பஸ் கண்டக்டர் கைது
மும்பை: மும்பையில் எல்.கே.ஜி மாணவியை ஸ்கூல் பஸ்சில் பலாத்காரம் செய்த கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை ஜுகு பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நர்சரி வகுப்புகள் முடிந்ததும், 12 நர்சரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஸ்கூல் பஸ் புறப்பட்டது. விலே பார்லே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்ராஜ்புத் (35) என்பவன் கண்டக்டராக இருந்தான்.
அந்தேரி பகுதியில் ஒவ்வொரு மாணவியாக இறக்கி விடப்பட்ட பின்பு கடைசியாக 4 வயது மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது கண்டக்டர் ரமேஷ்ராஜ்புத், தனியாக இருந்த மாணவியை மிரட்டி பஸ்சின் கடைசி இருக்கைக்கு இழுத்து சென்றான். அங்கு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான். பிறகு அவன் மாணவியை மிரட்டி பின்னர் வீட்டில் இறக்கி விட்டான். பயந்து போன மாணவி இதுபற்றி அன்று வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவி பயந்தவாறு அமர்ந்திருந்தாள். இதனைக் கண்ட ஆசிரியை அவளிடம் விசாரித்த போதுதான் கண்டக்டர் செய்த கொடூரத்தை சிறுமி விவரித்தாள். உடனே அந்த ஆசிரியை சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அந்தேரி போலீசார் கண்டக்டர் ரமேஷை உடனடியாக கைது செய்தனர். அவன் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பள்ளி வாகனங்களில் மாணவிக்கு உதவியாக பெண் உதவியாளர் யாரும் வரவில்லை என்பதால் அது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளி பஸ்சுக்கு வழகங்கப்பட்ட அனுமதியையும் போலீசார் ரத்து செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications