ஸ்ரீவில்லிபுத்தூர்.. பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயம்: ஆசிரியையை தாக்கிய கடற்படை வீரர்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உண்டு உறைவிடப் பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை மாயமாகிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு என உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் நத்தம்பட்டி கீழூரைச் சேர்ந்த காமாட்சி என்பவரின் மகள் காஞ்சனா தேவி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் மீனா நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இன்னொரு ஆசிரியை மீது தாக்குதல்-கடற்படை வீரர் கைது:
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியையை செங்கலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கடற்படை வீரரை போலீஸார் கைது செய்தனர்.
கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி (45) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (22). தற்போது கொச்சியில் கடற்படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை புஷ்பராணி, வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து வந்து கொண்டிருந்தபோது, திருஞானசம்பந்தம், ஆசிரியையின் மகள் குறித்து தகாத வார்த்தைகள் பேசியாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், செங்கலைக் கொண்டு திருஞானசம்பந்தம் ஆசிரியை புஷ்பராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் புஷ்பராணி காயமடைந்தார். இதனையடுத்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடற்படை வீரர் திருஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications