காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரானார் ராகுல் காந்தி!

இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ தலைவராக, அதாவது சோனியாவுக்கு அடுத்த இடத்திற்கு ராகுல் காந்தியைக் கொண்டு வந்து விட்டது அக்கட்சி.
இந்தப் புதிய பதவி குறித்து ராகுல் காந்தி கூறுகையில், எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனது கட்சியும் மிகவும் பழமையான, பாரம்பரியமான, அனுபவம் வாய்ந்த கட்சி. இதன் துணைத் தலைவராகியிருப்பது பெருமை தருகிறது என்றார்.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் இந்கத முடிவு எடுக்கப்பட்டது. 3 நாள் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இன்றைய இறுதி நாள் கூட்டத்தில் ராகுல் காந்தி, கட்சியின் துணைத் தலைவராக முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பேசவுள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தியின் நியமனத்தை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாம். தீர்மானத்தை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கொண்டு வந்தார். இதை பின்னர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications