கோ-எஜூகேஷனை தடை செய்யனுமாம்: ஜமாத்-இ- இஸ்லாமி சொல்கிறது!
ஹைதராபாத்: பலாத்கார சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமே ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜூகேஷன் கல்விமுறைதான்... இதை தடை செய்து பெண்களுக்கு தனியேதான் கல்வி கற்பிக்க வேண்டும் என்று ஆந்திராவின் ஜமாத்-இ- இஸ்லாமி- ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா ஜலாலுதீன் உம்ரி கருத்து தெரிவித்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
நாட்டில் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜமாத் தலைவர் மெளலானா இது தொடர்பாக கூறுகையில், பலாத்கார சம்பவங்களை சட்டங்கள் மட்டுமே தடுத்துவிட முடியாது. சமூக சூழ்நிலையை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்.
இந்த பிரச்சனை என்பது கோஎஜூகேஷன் கல்வி முறையில்தான் தொடங்குகிறது. இதனால்தான் பெண்களுக்கு தனியே கல்வியை கற்பிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பலாத்கார தாக்குதல்களை நிகழாத வகையிலான சூழலை உருவாக்கியிருக்கிறது.
பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். கோ எஜூகேஷன் கல்வி முறைக்கு தடை விதிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட 11 பரிந்துரைகளை வர்மா கமிஷனிடம் ஜமாத்-ன் சார்பில் கொடுத்திருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications