1200 புலிகளை இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்... சொல்கிறது இலங்கை ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தின் பிடியில் சிக்காமல் 1200 விடுதலைப் புலிகள் தப்பி விட்டனர்.அவர்களில் பலர் இலங்கையிலேயே தலைமறைவாக உள்ளனர். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

அதாவது இந்த 1200 பேரில் 400 பேர் வட கிழக்கு மாகாணங்களில் இன்னும் வசித்து வருகின்றனராம். ஆனால் இவர்களை இதுவரை பிடிக்க முடியவில்லையாம் இலங்கை ராணுவம். இலங்கையிலும், வெளியிலும் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று சர்வதேச சமுதாயத்திற்கு போக்குக் காட்டவும், இதை சாக்காக வைத்து ராணுவத்தை மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை நிறுத்தி வைக்கவுமே இப்படி ஒரு புரூடா நியூஸை இலங்கை ராணுவத் தரப்பு வெளியிட்டு வருவதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு உயர் கல்வி அமைச்சர் திஸநாயகே கூறுகையில், பிரபாகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, புலம் பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+