ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காரைக்கால் வினோதிநிக்கு பிரதமர் ரூ. 3 லட்சம் நிதியுதவி

காரைக்கால் நகரைச் சேர்ந்த வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் ஆசிட் வீசினார். இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வினோதினியின் மீது நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் அவரது இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது.கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக் கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி வினோதினியின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், வினோதினியின் மருத்து சிகிச்சைச் செலவுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். நிதிஉதவிக்கான காசோலையை மத்திய அமைச்சர் நாராயணசாமி நாளை வழங்குகிறார். ஏற்கனவே வினோதினியின் சிகிச்சைக்காக புதுவை முதல்வர் ரங்கசாமி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications