தங்கம் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்.. இறக்குமதி வரியை உயர்த்தியது அரசு

இந்தியாவில்தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவும், தங்கத்தின் இறக்குமதிக்காகவும் இந்தியா அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2011-2012-ம் நிதி ஆண்டில் இந்தியா வெளிநாட்டில் இருந்து ரூ.3.10 லட்சம் கோடி அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்தது. 2012-2013-ம் நிதி ஆண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.2.9 லட்சம் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதிக்கு இதுவரை 4 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அன்னிய செலாவணியை கருத்தில் கொண்டு, தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நேற்று திடீரென்று 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தியது. இந்த வரி உயர்வு உடனடியான அமலுக்கு வந்தது.இந்த தகவலை பொருளாதார விவகார துறையின் செயலாளர் அரவிந்த் மாயாராம் தெரிவித்தார்.
இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் தங்கம் இறக்குமதி கணிசமாக குறையும் என்றும் அப்போது அவர் கூறினார். ஆனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும். ஏற்கனவே தங்கம் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications