துப்பட்டாவால் கூந்தலை மூடாத மனைவி... கோபத்தில் வெட்டி எறிந்த கணவன் கைது!
காசியாபாத்: உ.பி மாநிலம் காசியாபாத் அருகே துப்பட்டாவால் தலையை மூடாத மனைவியின் கூந்தலை வெட்டி எறிந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
காசியாபாத் மாவட்டம் பிரேம் நகர் பகுதியை சேர்ந்த இஸ்ரார் மனைவி ருக்சானா. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவரது கணவர், ‘ஏன் தலையை துப்பட்டாவால் மூடவில்லை என்று கேட்டார். அதற்கு ருக்சானா, துப்பட்டா காற்றில் பறந்துவிட்டது. அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு சமாதானமடையாத இஸ்ரார், மனைவி ருக்சானாவின் கூந்தலை கத்திரியால் வெட்டி தூர எறிந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரேம் நகர் போலீஸ் நிலையத்தில் ருக்சானா புகார் அளித்தார். திருமணமான நாள் முதல் கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இஸ்ராரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications