89 தமிழ் நகரங்களின் பெயர்களை சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள்
கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு.
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம். கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு ரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை
ஈழத் தமிழர்களின் மனங்களில் என்றும் பிரகசாமாக வீற்றிருப்பது வரலாற்றச் சிறப்பு வாய்ந்த வட்டுக்கோட்டை. அந்த நகரின் பெயரை சிங்களத்தில் பட்டகொட்ட என்று மாற்றப் போகிறார்களாம்.

பருத்தித்துறை பேதுருதொடுவ
அதேபோல தமிழர்களின் இன்னொரு முக்கிய நகரமான பருத்தித்துறையின் பெயரை பேதுருதொடுவ என்று மாற்றத் திட்டமிட்டுள்ளனராம். இதேபோல நைனாதீவு, நாகதீப என்று மாற்றப்படவுள்ளதாம்.

புலிகளின் கிளிநொச்சி இனி கரணிக
விடுதலைப் புலிகள் வரலாற்றில் முக்கிய இடம் வகித்த கிளிநொச்சி நகரின் பெயரை கரணிக என்று மாற்றவுள்ளனராம். அதேபோல முல்லைத்தீவின் பெயரை மோலடோவா என்று மாற்றவுள்ளனராம்.

இனி அம்மா கிடையாது... அம்மே?
விட்டால் இனி தமிழர்கள் தங்களது தாய்மார்களை அம்மா என்றுகூப்பிடக் கூடாது, சிங்களத்தில் அம்மே என்றுதான் கூப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டாலும் உத்தரவிடுவார்கள் போலத் தெரிகிறது.

தமிழை ஒழிக்கும் முயற்சி
ஈழம் என்பது தமிழர்களின் தாயகமே அல்ல என்று முற்றிலும் வரலாற்றைத் திருப்பி எழுதும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அதாவது தமிழ் என்ற ஒன்று ஈழத்தில் இருந்தது என்ற அடையாளமே இல்லாமல் செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
சிங்கள அரசின் இந்த தமிழ் துவேஷ நடவடிக்கையால் ஈழத் தமிழர்கள் பெரும் துயரத்திலும், அச்சத்திலும் மூழ்கியுள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications