இஸ்ரேல் தேர்தல்: மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு? ஆட்சி அமைக்கப் போராடுகிறார்!

இஸ்ரேலின் 120 தொகுதிகளில் 31இடங்களை நெதன்யாகு கட்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் யேஷ் அடிட் கட்சி 19 இடங்களைக் கைப்பறியுள்ளது. நெதன்யாகு கடந்த 2 முறை ஆட்சி அமைக்க உதவிய வலதுசாரிக் கட்சிகள் ஆதரவைக் கோராமல் யேஷ் அடிட் கட்சித் தலைவர் யேர் லாபிட்டுடன் இணைந்து ஆட்சி அமைக்க நெதன்யாகு முயற்சித்து வருகிறார்.
இஸ்ரேலின் 64 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது இல்லை. அதிக இடங்களைப் பெறக் கூடிய கட்சி, இதர கட்சிகளுடன் கூட்டணி அரசை அமைத்துதான் வருகின்றன.
தற்போதைய தேர்தலில் நெதன்யாகுதான் மீண்டும் பிரதமராவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களிலேயே அவரது கட்சி வென்றுள்ளது. இதனால் பல கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். இருப்பினும் ஆட்சியில் இணைவதற்கு யேஷ் அடிட் கட்சியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து 15 இடங்களைப் பெற்றுள்ள மூன்றாவது பெரிய கட்சியோ, அரசியல் நாடகங்களை அமைதியாக வேடிக்கைப் பார்ப்போம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் நெதன்யாகுவின் மீண்டும் பிரதமர் கனவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications