ராகுல் காந்திக்கு பதவி: கரூரில் இளைஞர் காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதை இளைஞர் காங்கிரஸார் வரவேற்றுள்ளனர். இதையடுத்து தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில முன்னாள் செயலாளர் ராஜேஸ் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்பு அந்த வழியாக சென்ற மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் லெனின், பாலச்சந்தர், நிர்வாகிகள் சரவணன், சண்முகநாதன், யுவராஜ், ஜெயந்தி, புஷ்பலதா, காங்கிரஸ் சேவா தள மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications