ஊழலுக்குக் காரணமே எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினராம்: சமூகவியாளர் ஆசிஷ் நந்தியின் ‘கண்டுபிடிப்பு’

Subscribe to Oneindia Tamil

Ashis Nandy
ஜெய்ப்பூர்: நாட்டின் ஊழலுக்குக் காரணமே ஒடுக்கப்பட்ட பிரிவினராகிய எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினர்தான் என்று சமூகவியலாளரான ஆசிஷ் நந்தி கூறியுள்ளது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ‘இலக்கிய திருவிழா'வில் பேசிய ஆசிஷ் நந்தி, நாட்டின் பல ஊழல்களுக்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்தான். இவர்களோடு பழங்குடி இன மக்களும் இப்போது இணைந்திருக்கின்றனர். தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினருமே ஊழலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

ஆசிஷ் நந்தியின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி இது குறித்து கூறுகையில், இத்தகைய கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லாவும் ஆசிஷ் நந்தியின் கருத்தை நிராகரித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தலித் எழுத்தாளர் சந்திரபான் பிரசாத், ஆசிஷ் நந்தி கூறுவது போல் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்பதற்கு என்ன புள்ளி விவரம் அவரிடம் இருக்கிறது? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் இப்படி பேசக் கூடாது. அவர் தனது அறிவுத் தன்மையை தவறாகப் பயன்படுத்துகிறார். மற்றவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றதுதான் இது என்று சாடியுள்ளார்.

ஆனாலும் ஆசிஷ் நந்தியோ தமது கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கொள்ளவும் தயார் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+