பாகிஸ்தானில் தாலிபான், ராணுவத்திற்கு இடையே பயங்கர மோதல்: 31 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் மெய்டன் பகுதியில் உள்ள டிராவில் சுமார் 300 தாலிபான் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ராணுவத்தினரை தாக்கினர். பதிலுக்கு ராணுவத்தினரும் தீவிரவாதிகளை தாக்கினர். மணிக்கணக்கில் நடந்த இந்த மோதலில் தீவிரவாதிகள் 15 பேர், ராணுவத்தினர் 13 பேர் மற்றும் மூதாட்டி உள்பட கிராமத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தாலிபான்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
மேலும் ராணுவத்தினர் 8 தீவிரவாதிகளை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வரும் 2014ம் ஆண்டில் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு தாலிபான்கள் பாகிஸ்தானில் வலுவானவர்களாகிவிடுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தனித்தனி பிரிவாக செயல்பட்டாலும் இரு அமைப்புகளுக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications