திமுகவை விட அதிமுக அரசுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது: நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil

நெல்லையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் திருமண விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சி நடக்கும் காலத்தில் தான் மாநில அரசுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது. மத்திய அரசு எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. பத்மபூஷன் விருதை வழங்குவதிலும் எவ்வித பாகுபாடும் கிடையாது. பாடகி ஜானகி திறமையானவர். அவர் விருதை பெற்றுக் கொள்ள வேண்டும். மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதில் வந்ததும் பேச்சு நடத்தப்படும் என்றார்.
பாடகி ஜானகி பத்ம்பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார். ஆனால் அந்த விருதை வாங்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications