ரயில் தண்டவாளத்தில் படுத்து துண்டு துண்டான பெங்களூர் கல்லூரி காதலர்கள்: போலீசார் தீவிர விசாரணை
மாண்டியா: பெங்களூரில் பிபிஎம் படித்து வந்த 19 வயது காதல் ஜோடி ஒன்று மாண்டியாவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரைவிட்டது.
பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஎம் படித்து வந்த 19 வயது காதல் ஜோடி ஒன்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவு செய்தது. இதையடுத்து அவர்கள் நேற்று மாண்டியா மாவட்டம் மாத்தூர் பகுதியில் இருக்கும் கெஜ்ஜாலகெரே என்ற இடத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் காதல் ஜோடி மீது ஏறிச் சென்றதில் இருவரின் உடல்களும் துண்டாகிப் போனது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதம் மூலம் அவர்கள் பற்றிய சில விவரங்கள் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களை வாங்க இதுவரை யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications