நிலக்கரி ஊழல்: இந்தோனேசியாவில் கைதான மது கோடாவின் கூட்டாளி இந்தியா கொண்டு வரப்பட்டார்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் கூட்டாளி அனில் பஸ்தாவதே (48). அவர் மதுகோடா முதல்வராக இருந்த காலத்தில் நிலக்கரி சுரங்க கான்டிராக்ட் எடுக்க அரசு பணத்தில் இருந்து ரூ.4,000 கோடியை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மதுகோடாவுக்காக துபாய் மற்றும் பிற நாடுகளில் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்திருக்கக்கூடும் என்று அமலாக்கப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்த பஸ்தாவதே கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கப் பிரிவினர் அவரை இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் இந்தியா கொண்டு வரப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் அவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவரை இன்று விமானம் மூலம் ராஞ்சி கொண்டு செல்கின்றனர்.
பஸ்தாவதே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மாபெரும் மாளிகையில் ஒரு 'டான்' ஸ்டைலில் சொகுசாக வாழ்ந்து வந்தார்.












Click it and Unblock the Notifications