சர்வோதயா எக்ஸ்பிரஸில் வெஜ்பிடபிள் பிரியாணியில் எலி: பயணிகள் ஆத்திரம்
அகமதாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய ஆசிரியர் நிலேஷ் பட்டேலின் குடும்பத்தாருக்கு சர்வோதயா எக்ஸ்பிரஸில் வழங்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் எலி செத்துக் கிடந்தது.
குஜராத் மாநிலம் வல்சத் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் பட்டேல். ஆசிரியர். அவரது மனைவி வீணா. நிலேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு சர்வோதயா எக்ஸ்பிரஸில் குஜராத்திற்கு திரும்பினார்.
ரயிலில் நிலேஷ் 3 வெஜிடபிள் பிரியாணி வாங்கினார். அவரும், அவர் மனைவியும் இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டனர். மகன்கள் இருவரும் ஒரு பொட்டலத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது இளைய மகன் மோனிக்(7) சாப்பாட்டில் ஸ்பூனை வைத்தபோது ஏதோ கருப்பாக ஒரு பெரிய பொருள் தட்டுப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலேஷ் அது என்ன என்று பார்த்தபோது பிரியாணியில் காய்கறிகளுடன் சேர்ந்து வெந்த நிலையில் எலி ஒன்று கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். செத்த எலியைப் பார்த்ததும் சக பயணிகள் ரயில் ஊழியர்களை தாக்க முயன்றனர். அப்போது வெயிட்டர் ஒருவர் மீதமிருந்த பிரியாணியை கீழே கொட்டினார். இதை பயணிகள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இதையடுத்து அவர் இந்த விவகாரம் குறித்து ரயில்வே நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட கேன்டீன் மேனேஜர் யாருக்காவது புட் பாய்சனிங் ஏற்பட்டால் தான் பொறுப்பேற்தாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications