யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை

கடந்த நவம்பர் 27ம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினம் அனுஷ்டித்தனர். அவர்களை கைது செய்து சித்திவதை செய்து சிறைபடுத்தியுள்ளது இலங்கை அரசு. அந்த மாணவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி, நேற்றைய தினம் காலையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார்.
சாலையை மறித்து மறியலில் அமர்ந்த போராட்டக்குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் கோபிநாத், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் அருண்சோரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தந்தை பெரியார் தி.க ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழி, தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications