யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை

கடந்த நவம்பர் 27ம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினம் அனுஷ்டித்தனர். அவர்களை கைது செய்து சித்திவதை செய்து சிறைபடுத்தியுள்ளது இலங்கை அரசு. அந்த மாணவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி, நேற்றைய தினம் காலையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார்.
சாலையை மறித்து மறியலில் அமர்ந்த போராட்டக்குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் கோபிநாத், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் அருண்சோரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தந்தை பெரியார் தி.க ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழி, தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications