விஸ்வரூபம்- சென்சார் போர்ட் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்: மணீஷ் திவாரி
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியிடம் கமல் சார்பில் சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக கமல் உச்ச நீதிமன்றம் செல்லும்போது அங்கு மத்திய அரசு நியாயமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் அவரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஸ்வரூபம் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. சென்சார் போர்டு ஒரு முடிவை எடுத்தால் அதை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். திரைப்படம் தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications