போலி முதலீடு: கத்காரியிடம் வருமான வரித்துறை 4 மணி நேரம் துருவித் துருவி விசாரணை
மும்பை: பூர்த்தி குழும நிறுவனங்களில் போலியாக முதலீடு செய்தது குறித்து முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் வருமான வரித்துறையினர் 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி பவர் மற்றும் ஷுகர் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்ததில் 30 நிறுவனங்கள் போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அந்த போலி நிறுவனங்களுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் சொன்ன முகவரியில் எந்த நிறுவனமும் இல்லை என்பது தெரிய வந்தது.
வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க கத்காரி இவ்வாறு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு குறித்த விசாரணைக்குஆஜராகுமாறு கத்காரிக்கு வருமான வரித்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் நாக்பூரின் சதார் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கத்காரி நேற்று ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை இயக்குனர் கீதா ரவிச்சந்திரன் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.
ஆனால் தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், பூர்த்தி குழுமத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கத்காரி தெரிவித்துள்ளார். முன்னதாக கத்காரியின் பிரதிநிதிகள் வருமான வரித்துறையிடம் அவரது தனிப்பட்ட பணபரிவர்த்தனைகள், பூர்த்தி குழும முதலீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 25 பக்க ஆவணத்தை சமர்பித்தனர்.












Click it and Unblock the Notifications