போலி முதலீடு: கத்காரியிடம் வருமான வரித்துறை 4 மணி நேரம் துருவித் துருவி விசாரணை
மும்பை: பூர்த்தி குழும நிறுவனங்களில் போலியாக முதலீடு செய்தது குறித்து முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் வருமான வரித்துறையினர் 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி பவர் மற்றும் ஷுகர் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்ததில் 30 நிறுவனங்கள் போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அந்த போலி நிறுவனங்களுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் சொன்ன முகவரியில் எந்த நிறுவனமும் இல்லை என்பது தெரிய வந்தது.
வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க கத்காரி இவ்வாறு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு குறித்த விசாரணைக்குஆஜராகுமாறு கத்காரிக்கு வருமான வரித்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் நாக்பூரின் சதார் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கத்காரி நேற்று ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை இயக்குனர் கீதா ரவிச்சந்திரன் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.
ஆனால் தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், பூர்த்தி குழுமத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கத்காரி தெரிவித்துள்ளார். முன்னதாக கத்காரியின் பிரதிநிதிகள் வருமான வரித்துறையிடம் அவரது தனிப்பட்ட பணபரிவர்த்தனைகள், பூர்த்தி குழும முதலீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 25 பக்க ஆவணத்தை சமர்பித்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications