For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த சச்சின் டெண்டுல்கர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sachin
திருப்பதி: திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இன்று காலையில் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி இந்தியாவிலேயே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்கு இந்திய முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏராளமான விஐபிக்களும் ஏழுமலையானைக் காண வருகின்றனர்.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த விசேஷ தினம். இன்று இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்திருந்தார். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த அவர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட அவர் பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு, லட்டு பிரசாதமும், தீர்த்தமும் வழங்கப்பட்டது.

English summary
Star batsman Sachin Tendulkar offered worship at the famous hill shrine of Lord Venkateswara near hear in the wee hours today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X