கருப்பு பேட்ஜூடன் செம்மொழித் தமிழாய்வு பணியாளர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசிடமிருந்தோ தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்தோ தங்களது சாதகமான பதிலேதும் வரவில்லை என்பது பணியாளர்களின் புகார்.
இதனால் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்திற்கு பணியாளர் சங்கத் தலைவர் முனைவர் அ. ஆரோக்கியதாசு தலைமை தாங்கினார் நாளை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது.













Click it and Unblock the Notifications