தமிழக விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை: ஓ.பன்னீர்செல்வம்
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது திமுக உறுப்பினர் செழியன் பேசுகையில், தமிழகத்தில் காவிரி படுகையைச் சேர்ந்த 19 விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் இயற்கை மரணங்களை சிலர் தற்கொலையாக சித்தரித்திருக்கின்றனர் என்றார்.
இதைத் தொடர்ந்து எழுந்த களேபரத்தால்தான் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications