மனைவியின் கள்ளக் காதலனை கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளிய டிஎஸ்பிக்கு ஆயுள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது மனைவியின் கள்ளக்காதலனை ஆள் வைத்து கொலை செய்த முன்னாள் டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஐமனம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. இவர் கோட்டயத்தில் டிஎஸ்பியாக இருந்தார். இவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீ்ன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்தது. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு பிரவீன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் டிஎஸ்பி ஷாஜிதான் கூலிப்படையை ஏவி பிரவீனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷாஜி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பணியிலிருந்து ஷாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாஜிக்கும், கூலிப்படையை சேர்ந்த பினுவுக்கும் ஆயுள்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 4 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அங்கு ஷாஜி, பினுவின் ஆயுள் தண்டனையை கேரள உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் மற்ற இருவரை போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+