பரமக்குடி கலவரம்... 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பரமக்குடி கலவரம் தொடர்பாக கைதான ஐந்து பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த வருடம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது. அதில், பொன்னையாபுரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சேகர் என்ற சந்திரசேகர், சுதாகர், ஜெயமுருகன் ஆகிய 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதேபோல, அதே நாளில் பாம்புவிழுந்தான் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிங்கத்துரை, முருகன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுகாவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications