சட்டசபையில் ஜெ.அன்பழகன் வெளியேற்றம்: திமுக எம்எல்ஏக்கள் 2வது முறையாக வெளிநடப்பு
சென்னை: சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். இது அவரது கன்னிப் பேச்சாகும்.
அவர் பேசுகையில், ஒரே கையெழுத்தில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு கடனை திமுக தலைவர் கருணாநிதி தள்ளுபடி செய்தார். இந்த ஆட்சியில் மின்வெட்டு அதிகமாகி விட்டது. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இன்னும் அறிவிக்கவில்லை என்றார்.
அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் குறுக்கிட்டு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் குறுக்கிட்டு விளக்கம் அளிக்கையில், இந்த மின்வெட்டுக்கு 100 சதவீத காரணம் திமுக ஆட்சிதான். அவர்களது ஆட்சியில் 4,000 மெகாவாட் தேவைக்கு 206 மெகாவாட் மின்உற்பத்திதான் செய்தார்கள். மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள் என்பதால் அதை திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டார்களோ அல்லது குடும்ப பிரச்சனையை தீர்க்கவே நேரம் இல்லை என்பதால் இதை கவனிக்காமல் விட்டார்களோ என்று தெரியவில்லை என்றார்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்து குரல் கொடுத்தனர். அப்போது திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன் ஆகியோர் எழுந்து நின்று பேச அவர்களுக்கும் அதிமுக தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து செங்குட்டுவன், ஜெ.அன்பழகன சபாநாயகர் எச்சரித்தார். ஆனாலும் ஜெ.அன்பழகன் சபாநாயகரை பார்த்து கைநீட்டி விளக்கம் சொல்ல அனுமதி கேட்டார். பலமுறை தொடர்ந்து ஜெ.அன்பழகன் கைநீட்டி கேட்டதால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சபை காவலர்கள் அவரை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து 2வது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக டெசோ மாநாடு பற்றிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications