திருமணமான பெண்ணை குழந்தையுடன் அபகரித்துச் சென்ற அதிமுக கவுன்சிலர்
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் குழந்தையுடன் இளம்பெண்ணை கடத்திய அதிமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி மேலரத வீதியை சேர்ந்தவர் திருமலை முருகன். இவரது மனைவி கெங்காபரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் மகன் உள்ளார்.
புளியங்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்த ராஜவேல் பாண்டியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜவேல்பாண்டியனை அவரது மனைவி பிரி்ந்து சென்றார். அப்போது தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார்.
இதனால் ராஜவேல்பாண்டியன் தனது 3வது மகளுடன் புளியங்குடியில் வசித்து வந்தார். தற்போது இவர் புளியங்குடி நகராட்சி 7வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரை ராஜகோபால் பாண்டியன் மகள் காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே திருமலை முருகன் வெளி நாடு சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கெங்காபரமேஸ்வரி விமான நிலையம் சென்றார். அப்போது அவருக்கும் அங்கு வந்த ராஜவேல்பாண்டியனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
ஊருக்கு வந்த அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரு்லை முருகன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது மனைவிக்கும், ராஜவேல்பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் பிப் 1ம் தேதியன்று கெங்காபரமேஸ்வரி தனது மகனுடன் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருமலை முருகன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். அதில் அதிமுக கவுன்சிலர் ராஜவேல்பாண்டியன் தனது மனைவியையும், குழந்தைகளையும் கடத்தி சென்று இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து ராஜவேல்பாண்டியன் மற்றும் கெங்காபரமேஸ்வரியை தேடி வருகிறார்.