For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் மார்ச் 1ம் தேதி கூடும் பாஜக செயற்குழு.. மோடி குறித்து விவாதம்

Google Oneindia Tamil News

Narendra modi
டெல்லி: டெல்லியில் மார்ச் 1ம் தேதி கூடுகிறது பாஜக செயற்குழு. இக்கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் மார்ச் 1ம் தேதி தேசிய செயற்குழுவையும், அடுத்த நாள் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் பாஜக கூட்டியுள்ளது. இந்த இரு நாள் கூட்டங்களிலும் மோடிதான் முக்கிய விவாதப் பொருளாக இருப்பார் என்று தெரிகிறது.

ராஜ்நாத் சிங்கை பாஜக தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படும். அதேபோல அரசியல் சூழல்கள், பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாகவும் முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாம்.

மோடிக்கு எதிராக நிதீஷ் குமார் உள்ளிட்டோர் தீவிரமாக இருப்பது குறித்தும், அவர்களை சமாளிப்பது குறித்தும் கூட இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Bharatiya Janata Party's national executive committee will meet here on March 1 and the national council on the next two days. Besides endorsing the election of Rajnath Singh as party president, the national council will deliberate on the current political developments and the forthcoming Assembly elections wherein the party has high stakes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X