ஜெயலலிதா அவர்களே, இந்தக் கொடூரத்தைப் பார்த்தாவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், ப்ளீஸ்!
ஸ்ரீவைகுண்டம்: இந்தக் கொடுமையைக் கேளுங்கள். மனைவியிடம் குடிக்கப் பணம் கேட்டுள்ளார் 75 வயது தாத்தா. மனைவியோ பணம் இல்லை என்றார். அப்படியானால் தாலியை விற்றாவது கொடு என்றார் கணவர். அதற்கு அந்த 70 வயது பாட்டி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட தாத்தா, மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டார்.
ஸ்ரீவைகுண்டம் மேலஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்கு 75 வயதாகிறது. இவருடைய மனைவி 70 வயதான பெரிய பிராட்டி. இவர்களுக்கு 6 மகள்கள், 3 மகன்கள் என மொத்தம் 9 பிள்ளைகள்.அத்தனை பேருக்கும் திருமணமாகி ஆளாளுக்கு ஒரு ஊரில் வசிக்கின்றனர்.
அர்ஜூனன் இளம் வயதிலிருந்தே மொடாக் குடியராம். தனது மனைவிக்கு அவரது வீட்டார் அந்தக் காலத்தில் திருமணத்தின்போது போட்ட 75 பவுன் நகை, நிலம் உள்ளிட்டவற்றை விற்றே அழித்து விட்டார்.
வயதான காலத்திலும் அவரது குடிப்பழக்கம் போகவில்லை. இப்போதும் தினசரி குடிக்காவிட்டால் மனிதருக்கு தூக்கம் வராதாம். இந்த நிலையில், கணவருக்கும், மனைவிக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு சண்டை வந்தது. அதைத் தொடர்நது இருவரும் தனித் தனி வீட்டில் வசித்து வந்தனர்.
மனைவி தனியாக போனாலும் கூட விடாத அர்ஜூனன் குடிக்கப் பணம் இல்லாவிட்டால் மனைவியிடம்தான் வருவாராம். பணம் இல்லாவிட்டால் தாலியைக் கழற்றிக் கொடு என்று கேட்டு அடிப்பாராம்.
2 நாட்களுக்கு முன்பும் இப்படி மோதல் எழுந்துள்ளது. அப்போது தாலியைக் கழற்றித் தர பெரிய பிராட்டி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அர்ஜூனன், அரிவாளை எடுத்து தாலியை அறுக்க முயன்றார். மேலும், மனைவியின் கழுத்திலும் அரிவாளால் வெட்டியுள்ளார் குடிவெறியில் மூளை மழுங்கிப் போன அந்த வயதான மனிதர்.இதில் பெரிய பிராட்டி ரத்த வெள்ளத்தில் துடித்தபடி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியைக் கொன்ற பின்னர் பயந்து போன அர்ஜூனன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
குடிவெறி இதுபோல எத்தனையோ உயிர்களையும், பொருட்களையும், குடும்பங்களையும் தொடர்ந்து நாசம் செய்து வருகிறது... அரசோ இன்றைக்கு விற்பனை டார்கெட்டை புடிச்சாச்சா என்பதை மட்டுமே கவனத்துடன் பார்த்து வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications