என்னுடன் செக்ஸ் வச்சுக்கோ... எஸ்.எம்.எஸ்.மூலம் மாணவனை அணத்திய ஆசிரியை கைது

அந்த ஆசிரியையின் பெயர் அமன்டா லுட்விக். இல்லினாய்ஸ், பியோரியா நகரைச் சேர்ந்தவர்.அவரை கடந்த வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
9ம் கிரேடுக்கான ஓவிய டீச்சர் ஆழார் இவர். மைனர் பையனை பாலியல் விவகாரங்களுக்குத் தூண்டி விட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தனது வகுப்புப் பையனுக்கு இவர் தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார். அதில் மிகவும் செக்ஸியான வார்த்தைகளை கூறி வந்துள்ளார். தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறும் வற்புறுத்தி வந்துள்ளார். அவனது பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவரது மெசேஜ்கள் இருந்தனவாம்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகமும், போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மாணவனுக்கு செக்ஸியான மெசேஜ்கள் அனுப்பியதை ஒத்துக் கொண்டார் ஆசிரியை அமென்டா.
இதையடுத்து அவர் கைது செய்யபப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications