8வது வாட்டி மணந்த 26 வயது இளைஞர்.. 7 பேருக்கும் அல்வா கொடுத்து விட்டு!
ஷாடோல், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் ஒரு கல்யாண ராமன் 8வது முறையா திருமணம் செய்துள்ளார். இதற்கு முன்பு திருமணம் செய்த 7 பேரையும் அவர் கைவிட்டு விட்டார். அவரது 6வது மனைவி தேவகி பய் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் என்ற ஊரைச் சேர்ந்தவர் உமேந்திர பிரசாத் மெஹ்ரா. இவருக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் இது முதல் திருமணமல்ல, மாறாக 8வது திருமணமாகும்.
இது அவரது 6வது மனைவி தேவகி மூலம்தான் வெளியே தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் தேவகி. மேலும் மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினரான வந்தனா மாண்டவி என்பவரிடமும் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துத் தேவகி கூறுகையில், என்னை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார் உமேந்திரா. ஒருவருடத்திற்குமுன்பு என்னை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு அவரைப் பற்றி நான் விசாரித்தபோதுதான் அவர் ஏற்கனவே 5 பேரை மணந்து பிரிந்தது தெரிய வந்து அதிர்ந்தேன். இப்போது என்னையும் விட்டுப் பிரிந்து, மேலும் ஒருவரை மணந்து, மறுபடியும் 8வதாக ஒருவரையும் மணந்து மோசடி செய்துள்ளார் என்றார்.
உமேந்திரா எப்போது இந்த திருமண லீலைகளை முடிப்பாரோ... போலீஸ் கையில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications