பஸ் தினம்: கல்லூரி முதல்வர்களுக்கு போலீசார் கடிதம்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இந்த கொண்டாட்டித்தின்போது வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் பஸ் தினம் கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15-பி பஸ்ஸில் பஸ் தினம் கொண்டாடப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அயனாவரம், வேப்பேரி, கெல்லீஸ் ஆகிய பகுதிகள் 14 இடங்கள் மற்றும் பஸ் நிறுத்தம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எழும்பூர் வடக்கு ரயில் நிலை பஸ் நிலையத்தில் இருந்து 15-பி பஸ்ஸை எடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக தங்கள் கல்லூரி வரை சென்று பஸ் தினத்தை கொண்டாட திட்டமிட்டனர்.
இதனால் எழும்பூர் வடக்கு ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இன்று காலையிலேயே 10க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர். போலீஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் சென்னை மாநில கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, தியாகராயர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் அருகிலும் சுமார் 100 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் பஸ்ஸை தங்கள் கல்லூரிக்கு அருகில் 3 கிமீ தூரம் வரை எடுத்துச் செல்வதால் கல்லூரிகள் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிறுத்தங்களில் நின்ற மாணவர்களை கூட்டம் சேர விடாமல் அவ்வப்போது பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சென்னையில் பஸ் தினம் கொண்டாட கல்லூரி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதையும் மீறி பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் தான் பஸ் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளோம்.
இது குறித்து அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட முயற்சித்தால் அவர்களை கைது செய்வோம் என்றார்.
சென்னையில் பஸ் தினம் கொண்டாட கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதில் இருந்து தான் போலீசார் பஸ் தின கொண்டாட்டம் நடைபெறவிடாமல் தடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications