For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிட் வீசியவனை ஆசிட் ஊற்றியே கொல்ல வேண்டும்: வினோதியின் தந்தை

By Mathi
Google Oneindia Tamil News

Vinodhini
சென்னை: தனது மகளின் மரணத்துக்குக் காரணமானவனையும் ஆசிட் ஊற்றி கொல்ல வேண்டும் என்று ஆசிட் வீச்சுக்குள்ளாகி உயிரிழந்த காரைக்கால் வினோதியின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வினோதியின் தந்தை ஜெயபால், என் மகள் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீதும் ஆசிட் ஊற்றி தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தூக்குத் தண்டனையெல்லாம் விதிக்கக் கூடாது. என் மகள் 3 மாத காலம் அவதிப்பட்டு உயிரிழந்திருக்கிறாள். இதேபோல் ஆசிட் ஊற்றியவனும் இந்தக் கொடுமையை அனுபவித்துத்தான் சாகனும்.. அவன் மீது ஆசிட் ஊற்றியே கொலை செய்ய வேண்டும் என்றார்.

வினோதியின் தாய்மாமா கூறுகையில், எத்தனையோ கோடி தமிழர்களின் பிரார்த்தனை வீணாகிப் போய்விட்டது.. பொதுமக்கள் கொடுத்த நிதி மூலம்தான் வினோதிக்கு சிகிச்சையே செய்தோம். ஆனால் இன்று எங்கள் பிள்ளையை நாங்கள் இழந்து நிற்கிறோம் என்றார் அவர்.

English summary
Karikal acid attack victim Vinodhini's father Jayapal has demanded the same acid punishmet to the youth who threw it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X