உடல் நலம் பாதிக்கப்பட்டு 2 பேர் மரணம்.. புழல் சிறையில் கைதிகள் போராட்டம்
சென்னை: சென்னை புழல் சிறையில் 2 கைதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். இதையடுத்து மற்ற கைதிகள் அங்கு போராடட்த்தில் குதித்துள்ளனர்.
புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் 2 செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். சிறையில் உரிய மருத்துவ வசதிகள் கைதிகளுக்கு இல்லை என்று கூற அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தங்களைப் பார்க்க வந்த சிறைக் கண்காணிப்பாளர் கருப்பையாவிடமும் இப்புகாரை அவர்கள் தெரிவித்தனர்.
முறையான மருத்துவ வசதிகள், சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால், கடந்த சில நாட்களில் 2 கைதிகள் அங்கு மரணமடைந்துள்ளனராம். இதுதான் கைதிகளை போராட்டக் களத்தில் குதிக்கவைத்துள்ளதாம்.
கைதிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.
கைதிகள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications