Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தமிழ் ஈழத்திற்கு மாற்று எதுவுமில்லை… வைகோ! ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்ட 500 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தமிழ்ஈழத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்று சென்னையில் ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் அடையாறில் உள்ள ஐ.நா.வின் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.

இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பத்திரிகையாளர் ம.நடராசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன் பின் பங்கேற்றிருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் தொண்டர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந் நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமையில் சிலர் ஐ.நா. அலுவலகத்தை நோக்கி ஓடினர். போலீஸார் அவர்களைத் தடுத்து தள்ளிவிட்டனர்.

செருப்பு மாலை

ராஜபட்சவின் முகமூடி அணிந்த ஒருவருக்குச் செருப்பு அணிவித்து கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் ஐ.நா.சபை அதிகாரி பான்கி மூன் உள்ளிட்ட 3 அதிகாரிகளின் படங்களை ஒரு தரப்பினர் தீயிட்டுக் கொளுத்தினர். இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மாற்று எதுவும் இல்லை

முன்னதாக போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஐ.நா அதிகாரிகள் மீது விசாரணை, சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் எதுவும் கதைக்கு உதவாது. எனவே எங்கள் கோரிக்கை நியாயமானது. அனைத்துலக விசாரணை நடத்தவேண்டும். சிங்கள அரசு மீதும், கடமை தவறிய ஐ.நா அதிகாரிகள் மீதும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுதந்திர தமிழ் ஈழத்திற்கு மாற்று எதுவுமில்லை. இதை வலியுறுத்திதான் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக கூறினார்.

இலங்கையில் தமிழினப் படுகொலையை தடுக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் செவ்வாய்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி அமெரிக்கா, பிரான்ஸ், உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐ.நா. அலுவலகளை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+