தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் இன்று அப்பீல் மனு

கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு கண்ணிவெடி விபத்தில் வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் உள்பட 22 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். இந்த வழக்கில், சந்ததன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவர்களின் கருணை மனுவினை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, கடந்த 11 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 4 பேருக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால், தூக்கு தண்டனை கைதிகள் நால்வரின் குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவினை அவசர மனுவாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், கடந்த சனிக்கிழமை மறுத்துவிட்டதை அடுத்து இன்று மேல் முறையீடு செய்யப்படும் என்று, பிலவேந்திரனின் வழக்குரைஞர் சாந்தா போனிக்ஸ் தெரிவித்தார்.
பெல்காம் இன்டெலகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் ஞாயிற்றுக்கிழமை காலை சிறையில் சந்தித்துவிட்டு வந்த சாந்தா போனிக்ஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வீரப்பனின் கூட்டாளிகளான ஞானபிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என வதந்தி பரவியுள்ளது. இதுஉண்மை அல்ல. இதை சிறை அதிகாரிகளும் மறுத்துள்ளனர். 4 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல் முறையீடு செய்யப்படும் என்றார் அவர்.
இந்த மனு வரிசைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர்தான் அவர்கள் தண்டனையில் இருந்து தப்புவார்களா? என்பது தெரியவரும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications