அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கு நிறைவேற்றத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையா?: பாஜக சந்தேகம்
Subscribe to Oneindia Tamil

இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவிக்கையில்,
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.
அஜ்மல் கசாப், அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனைக்கு பழிவாங்குவோம் என்று தீவிரவாதிகள் அறிவித்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையால் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் இதில் ஈடுபட்டோருக்கு எதிராகவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications