For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருக்கடையூரில் பதறிய சிங்கள எம்.பி.... எதிர்ப்பு போராட்டங்களால் பீதி

By Mathi
Google Oneindia Tamil News

திருக்கடையூர்: தமிழ் இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசுக்கு எதிராக கொந்தளிப்பான நிலையில் தமிழகம் இருந்து வரும் நிலையில் திருக்கடையூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிங்கள எம்.பி. ஜெயசூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் வந்த இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் திருக்கடையூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் அந்த விடுதி முன்பாக ஒன்று திரண்டனர்.

சிங்கள எம்.பி.யே! தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு என்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

English summary
Tamil movements were protest the presece of Sri Lankan MP in Nagapattinam distrit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X