Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் 15 வயது சிறுமியை கற்பழித்து, விபச்சாரத்தில் தள்ளிய உறவுக்காரர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 15 வயது சிறுமியை தனது உறவுக்காரர் என்றும் பார்க்காமல் கற்பழித்து அவரை விபச்சாரத்தில் தள்ளிய நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ். டெல்லியில் வசிக்கும் அவர் கடந்த 2010ம் ஆண்டு தனது உறவுக்கார சிறுமியை(15 வயது) தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவர் அந்த சிறுமியை பல முறை கற்பழித்ததுடன் அவரை பலருக்கு விருந்தாக்கியுள்ளார். அவரை சீரழித்தவர்களிடம் பங்கஜ் பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஒருவர் அந்த சிறுமியை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு மீண்டும் அவரை வீட்டில் வந்து விட்டுள்ளார். காரில் இருந்து இறங்கிய சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறினார். இதையடுத்து போலீசார் சிறுமியை நிர்மல் சாயா என்ற காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பங்கஜை கைது செய்தனர். ஆனால் அவரோ அந்த சிறுமி யார் என்றே தெரியாது என்று சாதித்தார். இந்நிலையில் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காப்பக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறுகையில், அந்த சிறுமி தன்னை தன் உறவுக்காரரே கற்பழித்து பிறருக்கும் விருந்தாக்கியதாக கூறினார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். அவரது கோரிக்கையின்பேரில் அவருக்கு அரசு மருத்துவமனையில் கருகலைப்பு செய்யப்பட்டது என்றனர்.

பங்கஜ் மீதான குற்றம் உறுதியாகிவிட்டது விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+